பதிவு செய்த நாள்
28 ஜூலை2021
21:19
மும்பை:கடந்த மூன்று நாட்களாக, இந்தியா உள்ளிட்ட சர்வதேச பங்குச் சந்தைகள் தொடர் சரிவைக் கண்டு வருகின்றன. நேற்று, மும்பை பங்குச் சந்தையின் ‘சென்செக்ஸ்’ குறியீடு, வர்த்தகத்தின் இடையே, 750க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்தது.
தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’ குறியீட்டு, வர்த்தகத்தின் நடுவில், 250 புள்ளிகளுக்கும் மேலாக சரிவடைந்தது. உலகளவில் பங்குச் சந்தைகள் சரிய, சீனா, அமெரிக்கா ஆகியவை காரணம் எனலாம். இது போதாதென்று, பன்னாட்டு நிதியம், இந்திய பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்திருப்பது, நம் பங்குச் சந்தைகள் சரிய வழி வகுத்துள்ளது. சீன அரசு, ‘ஆன்லைன்’ கல்வி வியாபாரமாகி வருவதை தடுக்க, தனியார் கல்வி நிலையங்களை, லாபநோக்கமற்ற நிறுவனங்கள் பிரிவிற்கு மாற உத்தரவிட்டுள்ளது.
இதனால், கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள துணிகர முதலீட்டாளர்கள், முதலீடுகளை திரும்ப எடுக்க துவங்கியுள்ளனர். இணைய தொழில்நுட்ப நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சீனா, ஹாங்காங் பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டு வருகின்றன. அமெரிக்காவில் ஆப்பிள், கூகுள், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கை நன்கு இருந்த போதிலும், பங்குச் சந்தைகள் இறக்கத்தை சந்தித்துள்ளன.
இதற்கு, அமெரிக்காவில் அதிகரித்துள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி கடன் பத்திர வெளியீடுகளை குறைக்கும் என எதிர்பார்ப்பு தான் காரணம். மேலும், ‘டெல்டா’ வைரஸ் வேகமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தியவர்களும், முக கவசம் அணிந்து பணியாற்றுமாறு, அமெரிக்க நோய் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
இதனால், அதிகமானோர் பங்குகளை விற்று வருவதால், அமெரிக்க பங்குச் சந்தைகளும் சரிவில் உள்ளன.இந்த காரணங்களுடன், நடப்பு, 2021 – 22ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை, 12.5 சதவீதத்தில் இருந்து, 9.5 சதவீதமாக பன்னாட்டு நிதியம் குறைத்துள்ளதால், நம் பங்குச் சந்தைகளும் தொடர் சரிவில் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|