ஜி.எஸ்.டி., வரியினங்களை  குறைக்க அரசு பரிசீலனை ஜி.எஸ்.டி., வரியினங்களை குறைக்க அரசு பரிசீலனை ...  நாட்டின் நிதி பற்றாக்குறை  ரூ.2.74 லட்சம் கோடி நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ.2.74 லட்சம் கோடி ...
தங்கத்தின் தேவை 76 ‘டன்’னாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
21:12

புதுடில்லி:இந்தியாவில், ஏப்., – ஜூன் காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 76.10 ‘டன்’னாக உயர்ந்துள்ளதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

நடப்பு 2021 – 22ம் நிதியாண்டின் ஏப்., –ஜூன் காலாண்டில், இந்தியாவில், தங்கத்திற்கான தேவை 19.2 சதவீதம் உயர்ந்து, 76.10 டன்னாக அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 63.80 டன்னாக இருந்தது. இதே காலத்தில், தங்கத்தின் தேவை, மதிப்பின் அடிப்படையில் 26 ஆயிரத்து 600 கோடியில் இருந்து, 32 ஆயிரத்து 810 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஆபரண தங்கத்தின் தேவை 25 சதவீதம் உயர்ந்து, 44 டன்னில் இருந்து 55.10 டன்னாக அதிகரித்துள்ளது. இது, மதிப்பின் அடிப்படையில் 18 ஆயிரத்து 350 கோடியில் இருந்து, 23 ஆயிரத்து 750 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டு ஏப்., –ஜூன் வரை, சர்வதேச அளவில் ஆபரண தங்கத்திற்கான தேவை 60 சதவீதம் உயர்ந்து, 244 டன்னில் இருந்து, 391 டன்னாக அதிகரித்துள்ளது.

இதே காலத்தில், மொத்தம் தங்கத்திற்கான தேவை, 955 டன்னாக குறைந்துள்ளது; இது, 2020ல் இதே காலாண்டில், 960 டன்னாக இருந்தது.தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான தேவை 157 டன்னில் இருந்து, 244 டன்னாக உயர்ந்துள்ளது. இப்பிரிவின் தேவை, சில்லரை முதலீட்டாளர்களின் ஆதரவால் தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதே சமயம், இதே காலத்தில், தங்க இ.டி.எப்., போன்ற முதலீட்டு திட்டங்களுக்கான தங்கத்தின் தேவை, 90 சதவீதம் சரிவடைந்து, 428 டன்னில் இருந்து 41 டன்னாக குறைந்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில், தாய்லாந்து, ஹங்கேரி, பிரேசில் உள்ளிட்ட ஒன்பது நாடுகளின் மத்திய வங்கிகள், 207 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளன.எனவே, கடந்த ஆண்டை விட இந்தாண்டு, தங்கத்திற்கான தேவை, 1,600 –1,800 டன் என்ற அளவில் அதிகமாக இருக்கும் என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதலீடு குறைந்தது

உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்யும் இ.டி.எப்., திட்டங்களில், முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. முதலீட்டு நிறுவனங்கள், உலக நாடுகளின் பொருளாதார மீட்சிக்காக காத்திருக்கின்றன. பொருளாதார நடவடிக்கைகள் சூடு பிடித்தால், தங்க இ.டி.எப்., திட்டங்களில் முதலீடு அதிகரிக்கும்.

– பி.ஆர்.சோமசுந்தரம்,

நிர்வாக இயக்குனர்,

உலக தங்க கவுன்சில் இந்தியப் பிரிவு.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)