பதிவு செய்த நாள்
30 ஜூலை2021
19:57
புதுடில்லி:குஜராத்தைச் சேர்ந்த, ‘எக்ஸரோ டைல்ஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, வரும், 4ம் தேதி துவங்கி, 6ம் தேதி முடிவடைகிறது.ஒரு பங்கின் குறைந்தபட்ச விலை, 118 ரூபாய்; அதிகபட்ச விலை, 120 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் திக் ஷித்குமார் படேல் என்பவரின், 22 லட்சத்து 38 ஆயிரம் பங்குகள் உட்பட, மொத்தம், 1.34 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
பங்கு வெளியீட்டின் மூலம், 161 கோடி ரூபாய் திரட்ட, எக்ஸரோ டைல்ஸ் திட்டமிட்டு உள்ளது. பழைய கடன்களை திரும்பத் தரவும், நடைமுறை மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் நிதி பயன்படுத்திக் கொள்ளப்படும். முகேஷ்குமார், தினேஷ்பாய், ரமேஷ்பாய், கிரண்குமார் ஆகியோர் இணைந்து உருவாக்கிய, எக்ஸரோ டைல்ஸ் நிறுவனம், வீடு மற்றும் வணிக வளாகங்களில் பதிக்கப்படும், ‘விட்ரிபைட் டைல்ஸ்’ தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு, 27 மாநிலங்களில், 2,000 அதிகமான முகவர்கள் உள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|