ஆபத்து அழைப்புகள்: சி.ஓ.ஏ.ஐ., எச்சரிக்கை ஆபத்து அழைப்புகள்: சி.ஓ.ஏ.ஐ., எச்சரிக்கை ...  தொழில் திறன் பயிற்சியால் பயனடைந்த 1.37 கோடி பேர் தொழில் திறன் பயிற்சியால் பயனடைந்த 1.37 கோடி பேர் ...
வர்த்தகம் » ஜவுளி
ஐரோப்பாவின் பாரபட்ச வரியால் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2021
20:02

புதுடில்லி:ஐரோப்பிய நாடுகளின் பாரபட்ச வரி விதிப்பால், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா ஜார்டோஷ் பேசியதாவது:பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள், வங்கதேசம், கம்போடியா, வியட்னாம் போன்ற நாடுகளின் ஜவுளி ஏற்றுமதிக்கு வரி விலக்கு அளிக்கின்றன. ஆனால், இந்திய ஜவுளிகளுக்கு அதிக வரி விதிக்கின்றன.

இதன் காரணமாக, வங்கதேசம், வியட்னாம் போன்ற நாடுகளுடன், இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் போட்டியிட முடியாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி, 2 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், வங்கதேசம், வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகளின் ஜவுளி ஏற்றுமதி, முறையே, 2 லட்சத்து 84 ஆயிரம் கோடி, 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி, 58 ஆயிரத்து 275 கோடி ரூபாய் என்ற அளவிற்கு இருந்தது.

ஜவுளி ஏற்றுமதி வரி குறைப்பு குறித்து, ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.முதன் முறையாகநடப்பு 2021 – 22ம் நிதியாண்டின், ஏப்., –ஜூன் காலாண்டில், இந்தியாவின் ஏற்றுமதி, 3 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த 2020 – 21ம் நிதியாண்டின், இதே காலாண்டை விட, 47.34 சதவீதம் அதிகம். இந்திய வரலாற்றில், ஒரு காலாண்டில் இந்த அளவிற்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதுவே முதன் முறையாகும்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)