பதிவு செய்த நாள்
30 ஜூலை2021
20:02
புதுடில்லி:ஐரோப்பிய நாடுகளின் பாரபட்ச வரி விதிப்பால், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா ஜார்டோஷ் பேசியதாவது:பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள், வங்கதேசம், கம்போடியா, வியட்னாம் போன்ற நாடுகளின் ஜவுளி ஏற்றுமதிக்கு வரி விலக்கு அளிக்கின்றன. ஆனால், இந்திய ஜவுளிகளுக்கு அதிக வரி விதிக்கின்றன.
இதன் காரணமாக, வங்கதேசம், வியட்னாம் போன்ற நாடுகளுடன், இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் போட்டியிட முடியாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி, 2 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், வங்கதேசம், வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகளின் ஜவுளி ஏற்றுமதி, முறையே, 2 லட்சத்து 84 ஆயிரம் கோடி, 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி, 58 ஆயிரத்து 275 கோடி ரூபாய் என்ற அளவிற்கு இருந்தது.
ஜவுளி ஏற்றுமதி வரி குறைப்பு குறித்து, ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.முதன் முறையாகநடப்பு 2021 – 22ம் நிதியாண்டின், ஏப்., –ஜூன் காலாண்டில், இந்தியாவின் ஏற்றுமதி, 3 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த 2020 – 21ம் நிதியாண்டின், இதே காலாண்டை விட, 47.34 சதவீதம் அதிகம். இந்திய வரலாற்றில், ஒரு காலாண்டில் இந்த அளவிற்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதுவே முதன் முறையாகும்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|