‘தேவ்யானி இன்டர்நேஷனல்’ பங்கு விலை நிர்ணயம் ‘தேவ்யானி இன்டர்நேஷனல்’ பங்கு விலை நிர்ணயம் ... சிறு தொழில் துறைக்கு அரசு ஆதரவு சிறு தொழில் துறைக்கு அரசு ஆதரவு ...
‘ஆப்பிள்’ தலைமை பதவி எலான் மஸ்க் ஆசைப்பட்டாரா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
20:11

புதுடில்லி:‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமை பதவியை பிடிக்க முயற்சித்தார் என வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த செய்தி தவறானது என எலான் மஸ்க் தற்போது மறுத்துள்ளார்.‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையின் நிருபர் டிம் ஹிக்கின்ஸ், டெஸ்லா மற்றும் எலான் மஸ்க் குறித்து, ‘பவர் பிளே’ எனும் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.இப்புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது. அப்புத்தகத்தில் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக வர, எலான் மஸ்க் முயற்சித்தது குறித்தும் எழுதப்பட்டு இருப்பதாக ஒரு செய்தி வெளியானது.

கடந்த 2016ல், டெஸ்லா நிறுவனத்தை, ஆப்பிள் கையகப்படுத்துவது குறித்து, தற்போதைய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், எலான் மஸ்க் உடன் பேசியதாகவும்; அப்போது எலான், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக வர விரும்புவதாக தெரிவித்ததாகவும், புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதை எலான் மஸ்க் மறுத்துள்ளார். தானும், டிம் குக்கும் ஒருபோதும் தொலைபேசியில் பேசியதோ அல்லது எழுத்து பரிமாற்றமோ செய்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.அதேசமயம், ‘டெஸ்லாவை ஆப்பிள் வாங்கி கொள்வது குறித்து, டிம் குக் உடன் பேச விருப்பம் தெரிவித்திருந்தேன். எந்த நிபந்தனையையும் நான் விதிக்கவில்லை. ஆனால், டிம்குக் என்னுடன் பேச மறுத்துவிட்டார்’ என்றும் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா மாடல் 3 தயாரிப்பின் போது, மிக கடுமையான நெருக்கடிக்கு ஆளானார் எலான் மஸ்க். அப்போது, தற்போதைய மதிப்பில், 10ல் ஒரு பங்கு விலையில் நிறுவனத்தை கொடுத்துவிடும் முடிவில் இருந்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)