பதிவு செய்த நாள்
05 ஆக2021
20:59
புதுடில்லி:ஜூன் 2021 வரை, ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்யாத வரி செலுத்துவோர், 15ம் தேதி முதல், ‘இ-- – வே பில்’ எனும், மின்னணு ரசீதுகளை உருவாக்க முடியாது என, ஜி.எஸ்.டி., நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கை, பாக்கி இருக்கும் வரிக் கணக்கை தாக்கல் செய்வதை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி., வசூல் அதிகரிக்க துணைபுரிவதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
இம்மாதம், 15க்கு பின் வரிக் கணக்கு தாக்கலை, ஜி.எஸ்.டி., அமைப்பு சோதித்து, கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு மின்னணு ரசீதை உருவாக்குவதில் தடையை ஏற்படுத்தும். ஜூன் 2021 வரை, ‘ஜி.எஸ்.டி.ஆர்., 3பி’ படிவத்தை இரண்டு அல்லது மூன்று முறை தாக்கல் செய்யாதவர்களால் அல்லது ஜூன் காலாண்டில், ‘ஜி.எஸ்.டி., சி.எம்.பி., 08’ படிவத்தை இரண்டு அல்லது அதற்கு மேல் தாக்கல் செய்யாதவர்களால், 15ம் தேதிக்கு பின், மின்னணு ரசீதை உருவாக்க முடியாது.
இதனால், பாக்கி இருக்கும் கணக்குகளை உடனடியாக தாக்கல் செய்யுமாறு, ஜி.எஸ்.டி., நெட்வொர்க் கேட்டுக் கொண்டுள்ளது.மாநிலங்களுக்கு இடையேயான, 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மதிப்பு கொண்ட பொருட்களுக்கான சரக்கு போக்குவரத்துக்கு இ-- – வே பில் அவசியமாகும். இருப்பினும், தங்கத்துக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|