ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் ‘இ --– வே பில்’லில் கிடுக்கிப்பிடி ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் ‘இ --– வே பில்’லில் கிடுக்கிப்பிடி ...  ‘வோடபோன் ஐடியா’ நிலவரம் கலங்கி நிற்கும் வங்கிகள் ‘வோடபோன் ஐடியா’ நிலவரம் கலங்கி நிற்கும் வங்கிகள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மின்சார வாகனங்களுக்கு சலுகை விற்பனையை அதிகரிக்க உதவும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2021
21:02

புதுடில்லி:மின்சார வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் கட்டணத்தை செலுத்துவதிலிருந்து அரசு விலக்கு அளித்திருப்பது, விற்பனையை அதிகரிக்க உதவும் என, முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ‘ரிவோல்ட்’ தெரிவித்துள்ளது.

அண்மையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், மின்சார வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. மேலும், பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது.

இது குறித்து, ரிவோல்ட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை இத்துறைக்கு வழங்கி வருகிறது. பெட்ரோல் வாகனங்களை விட, மின்சார வாகனங்களை வாங்கலாம் என, மக்கள் கருதும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

மத்திய அரசு, அண்மையில் மின்சார வாகனங்களுக்கான ஊக்கச் சலுகையை 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்து அறிவித்தது. இதனால், மின்சார வாகனங்களின் விலை பெருமளவு குறைந்தது.மேலும், பெட்ரோல் வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவைகள் வரி 28 சதவீதமாக இருக்கும் நிலையில், மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பல மாநில அரசுகளும் பல்வேறு ஊக்க சலுகைகளை வழங்கி வருகின்றன.

ஏற்கனவே, ‘பேட்டரி’ விலை குறைந்து வரும் நிலையில், மின்சார வாகனங்கள், பெட்ரோல் வாகனங்களுக்கு இணையான விலையை நோக்கி வந்துகொண்டு இருக்கின்றன. இந்நிலையில், பதிவு சான்றிதழ் கட்டணத்தில் விலக்கு கொடுத்துள்ளது, மின்சார வாகன விற்பனைக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது.இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)