பதிவு செய்த நாள்
05 ஆக2021
21:03
புதுடில்லி:‘ஆப்டஸ் வேல்யு ஹவுசிங் பைனான்ஸ்’ நிறுவனம், 10ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், அதன் ஒரு பங்கின் விலை, 346 – 353 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 10ம் தேதி துவங்கி, 12ம் தேதியன்று முடிவடைகிறது. இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக இந்நிறுவனம், 2,780 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு உள்ளது.பங்கு வெளியீட்டின்போது, 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 6.5 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.
திரட்டப்படும் நிதியை, நிறுவனத்தின் மூலதன தேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிடப் பட்டு உள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 42 பங்குகள் அல்லது அதன் மடங்கு களில் வாங்கிக் கொள்ளலாம்.கடந்த 2010ம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்நிறுவனம், மிக குறைவான அளவில் வாராக் கடன் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்நிறுவனத்துக்கு 190 கிளைகள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|