பணியில் அமர்த்தல் ஜூலையில் அதிகரிப்பு பணியில் அமர்த்தல் ஜூலையில் அதிகரிப்பு ...   ‘அமேசான்’ தொடுத்த வழக்கில் ‘ரிலையன்ஸ், பியூச்சர்’ பின்னடைவு ‘அமேசான்’ தொடுத்த வழக்கில் ‘ரிலையன்ஸ், பியூச்சர்’ பின்னடைவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2021
20:16

புதுடில்லி:ரிசர்வ் வங்கி, அதன் பணக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், நேற்று முக்கியமான பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

‘ரெப்போ’ வட்டி விகிதத்தை மாற்றாமல், தற்போதிருக்கும் 4 சதவீதம் எனும் அதே நிலையை தொடர இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகன கடன் ஆகியவற்றுக்கான வட்டியிலும் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. இதனால் இத்தகைய கடன் வாங்கியவர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடலாம்.

மேலும், வங்கிகளின் ‘டிபாசிட்’டுகளுக்காக ரிசர்வ் வங்கி வழங்கும், ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதத்திலும் எந்த மாற்ற மும் செய்யப்படாமல், தற்போது நடைமுறையில் இருக்கும் 3.35 சதவீதம் என்ற நிலையே தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:

*ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாகவே தொடரும்
*ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் இல்லாமல் 3.35 சதவீதம் என்ற நிலையே தொடரும்
*வட்டி விகிதத்தில் இதற்கு முன், கடந்த 2020 மே 22 அன்று மாற்றத்தை மேற்கொண்டது. அதன்பின் நடைபெற்ற 7 கூட்டங்களின் முடிவிலும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

* பணக் கொள்கை குழு கூட்டத்தில், உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக வட்டி விகிதத்தில் மாற்றம் வேண்டாம் என தெரிவித்துள்ளனர்

* நடப்பு நிதியாண்டில், சில்லரை பணவீக்க விகிதம் 5.7 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 5.1 சதவீதமாக குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது

*நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதிஆண்டில் 9.5 சதவீதமாக இருக்கும் என்ற முந்தைய கணிப்பிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை

* கடந்த 2019 பிப்ரவரி முதல் இதுவரை 250 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது

* அடுத்த பணக் கொள்கை கூட்டம், அக்டோபர் மாதம் 6 – 8 தேதிகளில் நடைபெற உள்ளது.

குறையும் கடன் சுமை

பணக் கொள்கை முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டு, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறிய தாவது: தனி நபர்களுக்கான வீட்டு வசதி மற்றும் வணிக ரீதியான ரியல் எஸ்டேட் ஆகியவற்றின் கடனுக்கான வட்டி விகித குறைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும். ஏனெனில், இந்த இரு பிரிவுகளுமே அதிகளவிலான வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.

ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்ததை அடுத்து, வங்கிகளும் குறிப்பிடத்தக்க அளவில் வட்டியை குறைத்துள்ளன. கடன் சந்தையில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வீட்டுவசதி மற்றும் பெரிய தொழில்கள் ஆகியவற்றுக்கான வட்டி விகித குறைப்பு பரிமாற்றம் வலுவாக இருக்கிறது. குறைந்த வட்டி விகிதம் கடன் சுமையை குறைக்க உதவியுள்ளது.

மத்திய நிதியமைச்சகம், முன்தேதியிட்ட வருமான வரிச் சட்டப் பிரிவை நீக்கி, புதிய வருமான வரிச் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது, சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)