39 நகரங்களுக்குச் சேவையை விரிவுபடுத்தும் ஊபர் ரெண்டல்ஸ்39 நகரங்களுக்குச் சேவையை விரிவுபடுத்தும் ஊபர் ரெண்டல்ஸ் ...  நாட்டின் ஏற்றுமதி 50.45 சதவீதம் உயர்வு நாட்டின் ஏற்றுமதி 50.45 சதவீதம் உயர்வு ...
ஓரியன்ட்டின் அதிவேக பால்கன் 425 சீலிங் பேன் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2021
19:25

ஓரியன்ட் எலக்ட்ரிக் நிறுவனம் 1200 மில்லி மீட்டர் ஸ்வீப்சைஸ் கொண்ட ‘பால்கன்425’ என்கிற இந்தியாவின் அதிவேக மின்விசிறியை அறிமுகம் செய்துள்ளது. ஆச்சரியமூட்டும் விதத்தில் நிமிடத்திற்கு 425 முறை சுற்றக்கூடியதால் இந்த மின்விசிறி காற்றை வேகமாகவும், விசாலமாகவும் வீசும். இதே ரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஓரியன்ட் சம்மர் பிரீஸ் ப்ரோ’ என்கிற அதிவேக மின்விசிறியானது வலிமையான 14 போல் மோட்டார் மற்றும் அட்வான்ஸ்டு பிஎஸ்பிஓ தொழில்நுட்பத்துடன் வருகிறது.

தமிழகத்தில் பால்கன்425 மின்விசிறியை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, மற்ற மாநிலங்களிலும் இதனை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. வெள்ளை, மேட் பிரவுன் மற்றும் மெட்டாலிக் ப்ரான்ஸ்காப்பர் ஆகிய அழகழகான வண்ணங்களில் வரும் ஓரியன்ட் பால்கன்425 மின்விசிறி ரூபாய்.2655/-க்குக் விற்பனைக்கு வந்துள்ளது.

இதுபற்றி ஓரியன்ட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் துணை செயல் தலைவர் அத்துல் ஜெயின் கூறுகையில், “ஓரியன்ட் எலக்ட்ரிக் நிறுவனம் முக்கிய கவனம் செலுத்தும் சந்தையாக தமிழ்நாட்டை கருதுகிறது. தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்களில் பெரும்பாலும் வெப்பமான மற்றும் புழுக்கமான பருவநிலையே நிலவுவதால், காற்றினை வேகமாக தள்ளும் ஹை-திரஸ்ட் மின்விசிறிகளுக்கு அதிக தேவை உள்ளது. எங்களது அதிவேக மின்விசிறியைக் காட்டிலும் வேகமான மின்விசிறியான பால்கன்425-ஐ நாங்கள் உற்சாகத்துடன் அறிமுகம் செய்கிறோம். தமிழகத்தில் கடும் வெப்பம், அதிகரித்து வரும் தேவை மற்றும் வீட்டிலிருந்தே பணிபுரியும் கலாச்சாரம் தொடரும் இந்த காலகட்டத்தில், நாங்கள் எங்களது ‘சூப்பர்ஸ்பீடு ஜோடிக்கு’ நல்ல வரவேற்பு கிடைக்குமென நம்புகிறோம், என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)