பதிவு செய்த நாள்
10 ஆக2021
19:04
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 –- 7ம் தேதி வரையிலான காலத்தில், 50.45 சதவீதம் அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் தெரிவித்துள்ளதாவது:
இம்மாதம் 1 – 7ம் தேதி வரையிலான காலத்தில், ஏற்றுமதி 50.45 சதவீதம் அதிகரித்து, 54 ஆயிரத்து 834 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், இறக்கு மதியும் அதிகரித்துள்ளது. இறக்குமதி, கிட்டத்தட்ட 70 சதவீதம் அதிகரித்து, 77 ஆயிரத்து 330 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 22 ஆயிரத்து 496 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எண்ணெய் இறக்குமதி 141 சதவீதம் அதிகரித்து உள்ளது. மேலும் எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதியும் 31 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|