பதிவு செய்த நாள்
10 ஆக2021
20:19
அக்ஸோ நோபல் இந்தியா சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தனது பிரத்யேக, சூப்பர் – பிரிமியம் இண்டீரியர் எமல்ஷனை அறிமுகப்படுத்தியது ட்யூலக்ஸ். சமீபத்திய புதுமையான ‘ட்யூலக்ஸ் பெட்டர் லிவிங்க் ஏர் க்ளீன் பயோபேஸ்ட்’ இந்தியாவின் முதல் யுஎஸ்டிஏ சான்றளித்த உயிரி அடிப்படையிலான பெயிண்ட் ஆகும்.
‘ட்யூலக்ஸ் பெட்டர் லிவிங்க் ஏர் க்ளீன் பயோபேஸ்ட்’ 26 சதவீதம் உயிரி அடிப்படையிலான பொருள்களைக் கொண்டதாகும். மதிப்பு கூட்டும் வகையில், மூங்கில் கரி, தேயிலை மர எண்ணெய் உள்ளிட்ட இயற்கைக் கூட்டுப் பொருள்களின் ஆரோக்கியம் இந்தப் பெயிண்டுக்குக் கூடுதல் நிலைத்தன்மையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் தருகிறது.
‘காமிங்க் ப்ரீஸ்’ பேலேட் க்ரீமி ஆப்-வொயிட், சாப்ட், ம்யூடெட் பேஸ்டெல், ஸ்மோகி கிராபைட் என எதுவாக இருப்பினும் புத்துணர்வையும், ஒளிர்வையும் தரும்
சுகாதாரம் மற்றும் நலன்களுடன் சுற்றுச்சுழலுக்கு உகந்த இயற்கை நிலைத்தன்மையுடன் உருவாக்கப்பட்ட அக்ஸோ நோபல் கண்டுபிடிப்பு ‘தி ப்யூர் ஏர்’ எனப்படும் சுத்தமான காற்று தொழில்நுட்பம் ஆகும். இந்த பெயிண்டை ஒருமுறை சுவரிலும், உட்கூரையிலும் பூசிய பிறகு, இத்தொழில்நுட்பம் காரணமாக உள்ளரங்கக் காற்று மாசுகளை தேடிக் கண்டுபிடித்து அழிக்கும். ட்யூலக்ஸ் பெட்டர் லிவிங்க் ஏர் க்ளீன் பயோபேஸ்ட் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். வரும் மாதங்களில் கிழக்கு மற்றும் தெற்கு இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்கள் மற்றும் ஊர்களில் இதன் விற்பனை விரிவுபடுத்தப்படும்.
ட்யூலக்ஸ் பெட்டர் லிவிங்க் அறிமுகம் குறித்து அக்ஸோ நோபல் இந்தியா மேலாண் இயக்குனர் ராஜீவ் ராஜகோபால் விவரிக்கையில் ‘எங்கள் பெட்டர் லிவிங்க் வாடிக்கையாளர்களுக்குச் சரியான வண்ணம், பினிஷ் மற்றும் முழுமையான அனுபவத்தை வழங்க உத்தரவாதம் அளிக்கும், தவறும் பட்சத்தில் பெயிண்டை மாற்றித் தருகிறோம். இயற்கை மற்றும் உயிரி அடிப்படையிலான கூட்டுப் பொருள்களுடன் இணைந்த புதுமையான ப்யூர் ஏர் தொழில்நுட்பம் சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்தை மேம்படுத்தச் சிறப்பான நிலைத்தன்மையும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வழிமுறையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆற்றலையும் தருகிறது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|