ட்யூலக்ஸின் பெட்டர் லிவிங்க் ஏர் க்ளீன் பயோபேஸ்ட் பெயிண்ட்ட்யூலக்ஸின் பெட்டர் லிவிங்க் ஏர் க்ளீன் பயோபேஸ்ட் பெயிண்ட் ...  கொரோனா மருந்து தயாரிப்பு : முன்னெடுக்கிறது 'டெக் மகிந்திரா' கொரோனா மருந்து தயாரிப்பு : முன்னெடுக்கிறது 'டெக் மகிந்திரா' ...
தனியார் மயமாக்கல் மீண்டும் சூடு பிடிக்கும் பங்கு விலக்கல் நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2021
20:10

புதுடில்லி:பொதுத்துறை நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பங்கு விலக்கல் நடவடிக்கை, கொரோனா பாதிப்புகளை கடந்து மீண்டும் தொடர்வதாக, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலர் துஹின் காந்தா பாண்டே கூறியுள்ளார்.

‘ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன், பவன் ஹான்ஸ், பி.இ.எம்.எல்., நீலாஜல் இஸ்பத் நிகாம்’ உள்ளிட்ட நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சி, மார்ச் மாத இறுதிக்குள் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:கொரோனா எங்களை மிகவும் பாதித்துவிட்டது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், பங்கு விலக்கல் நடவடிக்கைகள் மீண்டும் துவங்கி இருக்கின்றன.ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களை வாங்க, ஏலதாரர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மிகவும் கவனிக்கப்பட்டு வரும் எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, இந்த நிதியாண்டுக்குள் வரும் என எதிர்பார்க்கலாம்.

நடப்பு நிதியாண்டில், 1.75 லட்சம் கோடி ரூபாயை, பங்கு விலக்கல் நடவடிக்கைகள் வாயிலாக திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில், எல்.ஐ.சி., பங்கு வெளியீடு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.நாங்கள் ஒரு நிறுவனத்தை தனியார்மயமாக்க இருப்பதாக அறிவித்த உடன், அதன் பங்கு விலை உடனடியாக அதிகரித்து விடுகிறது. இதற்கு அர்த்தம், இந்நிறுவன சந்தை மதிப்புகள், தனியார் கைகளில் அதிகம் உள்ளன என்பது தான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)