பதிவு செய்த நாள்
14 ஆக2021
20:22
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஜூலை மாதத்தில் 49.85 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில், ஏற்றுமதி 49.85 சதவீதம் அதிகரித்து, 2.62 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இம்மாதத்தில் பெட்ரோலிய பொருட்கள், பொறியியல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.ஜூலை மாதத்தில், ஏற்றுமதியை போலவே இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இறக்குமதி 63 சதவீதம் அதிகரித்து, 3.43 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 81 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், எண்ணெய் இறக்குமதி 97.45 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 95 ஆயிரத்து 386 கோடி ரூபாயாகும்.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், ஏற்றுமதி 74.5 சதவீதம் அதிகரித்து, 9.68 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில் இறக்குமதி 94 சதவீதம் அதிகரித்து, 12.77 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.தங்கத்தை பொறுத்தவரை இறக்குமதி கடந்த ஆண்டு ஜூலையில், 13 ஆயிரத்து 172 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஜூலையில், 31 ஆயிரத்து 80 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஜூலை மாதத்தில் ஏற்றுமதி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இது உலக வர்த்தகம் வேகமாக மீட்சி கண்டு வருவதை உணர்த்துவதாக உள்ளது என துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|