பதிவு செய்த நாள்
14 ஆக2021
20:33
புதுடில்லி:மூத்த தொழிலதிபரான ஆதி கோத்ரெஜ், ‘கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்தும், அதன் இயக்குனர் குழுவிலிருந்தும் விலகுகிறார்.
இதையடுத்து, அவரது இளைய சகோதரரான நாதிர் கோத்ரெஜ், அக்டோபர் 1ம் தேதியிலிருந்து நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார்.நாதிர் கோத்ரெஜ், தற்போது கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். ஆதி கோத்ரெஜ் பதவி விலகுவதை அடுத்து, இவர் இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பதவி வகிப்பார்.
தற்போது 79 வயதாகும் ஆதி கோத்ரெஜ், கோத்ரெஜ் குழுமத்தின் தலைவராகவும், கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கவுரவ தலைவராகவும் நீடிப்பார்.கோத்ரெஜ் குழுமத்தின் அங்கமான, கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ், நுகர்பொருட்கள், ரியல் எஸ்டேட், விவசாயம், ரசாயனம், நிதி சேவைகள் ஆகிய துறைகளில் இயங்கி வருகிறது.
கிட்டத்தட்ட 18 நாடுகளில் இந்நிறுவனம் கிளை பரப்பி உள்ளது.ஆதி கோத்ரெஜ் ஏற்கனவே கடந்த 4ம் தேதியன்று, ‘கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக குழுவிலிருந்து, அடுத்த மாதத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|