பதவி விலகுகிறார் ஆதி கோத்ரெஜ் பதவி விலகுகிறார் ஆதி கோத்ரெஜ் ...  கொரோனா சூழலிலும் தொடரும் முதலீடு  கொரோனா சூழலிலும் தொடரும் முதலீடு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன் அனுமதிக்கு பின் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2021
19:03

நிதி தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், எதிர்கால இலக்குகளை திட்டமிடவும் கடன் வசதி உதவுகிறது. தேவைக்கு ஏற்ப பல வகையான கடன் பெறலாம் என்றாலும், ஒவ்வொரு வகையான கடனுக்கும் ஒரு செயல்முறை இருக்கிறது.

கடன் விண்ணப்பத்தை முறையாக சமர்ப்பித்து வெற்றிகரமாக கடன் பெறுவது ஒரு பகுதி என்றால் அதைவிட முக்கியமானது கடனை சரியாக பராமரிப்பதாகும். கடன் சுமையில் சிக்காமல் இருக்க இது உதவும். அந்த வகையில் கடன் அனுமதி கிடைத்த பின் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இருக்கின்றன.

மாதத் தவணை:


வீட்டுக்கடனாக இருந்தாலும் சரி, கிரெடிட் கார்டு கடனாக இருந்தாலும் சரி, மாதத் தவணையை தவறாமல் செலுத்துவது முக்கியம். கடன் தவணை தவறுவது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் என்பதோடு, கடன் வலையில் சிக்குவதற்கான துவக்கமாகவும் அமையலாம். எனவே, முறையாக மாதத் தவணையை செலுத்துவதற்கான ஏற்பாடு அவசியம்.


அவசரகால நிதி:


பெரும்பாலானோர் அவசர கால நிதியின் அவசியத்தை உணர்ந்திருக்கலாம். எதிர்பாராத நெருக்கடிகளில், அத்தியாவசிய செலவுகளை சிக்கல் இல்லாமல் மேற்கொள்ள இந்த நிதி உதவுகிறது. பொதுவாக ஆறுமாத கால அடிப்படை செலவுக்கான தொகை அவசர கால நிதியாக இருக்க வேண்டும். இந்த தொகையில் கடன் தவணையும் சேர்ந்திருப்பது நல்லது.


கடன் அம்சங்கள்:



கடன் பெற்ற பின், மாதத்தவணை சுமையை குறைப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும். கடன் நிலுவைத்தொகையை மாற்றிக்கொள்ளும் வசதி இருந்தால், குறைந்த வட்டி அளிக்கும் வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம். ஒப்பீடு இணையதளங்களை பார்த்து இது தொடர்பான தகவல்களை அறியலாம்.


உபரி நிதி:



மாதத்தவணையை முறையாக செலுத்தி வந்தால் மட்டும் போதாது. இயன்றவரை கடனை முன்கூட்டியே செலுத்த முயற்சி செய்வது நல்லது. வாய்ப்பு இருந்தால், ஒரு பகுதி தொகையை முன்னதாக செலுத்தலாம். உபரியாக நிதி கிடைக்கும் போது வேறு செலவுகளை திட்டமிடாமல், கடனுக்கான முன்பணமாக செலுத்தலாம்.


கிரெடிட் ஸ்கோர்:


கடன் தொகையை செலுத்துவது தவிர, கடன் கணக்கை அவ்வப்போது கண்காணித்து வர வேண்டும். கணக்கு தொடர்பாக ஏற்படக்கூடிய எதிர்பாரா தவறுகளை இதன் மூலம் சரி செய்ய முடியும். மேலும் கிரெடிட் ஸ்கோர் அறிக்கையையும் கவனித்து ஏதேனும் தவறு இருந்தால் சரி செய்ய வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)