வேகமான வளர்ச்சியில் மின்னணு வர்த்தகம் வேகமான வளர்ச்சியில் மின்னணு வர்த்தகம் ...  ஆர்.ஐ.என்.எல்., நிறுவனத்தை வாங்க ‘டாடா ஸ்டீல்’ ஆர்வம் ஆர்.ஐ.என்.எல்., நிறுவனத்தை வாங்க ‘டாடா ஸ்டீல்’ ஆர்வம் ...
பண்டிகைக்காக காத்திருக்கும் சில்லரை விற்பனையாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2021
18:57

புதுடில்லி:நாட்டின் சில்லரை விற்பனை அதிகரித்து வருவதாகவும், அடுத்து பண்டிகை காலம் வர இருப்பதால் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றும், இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கமான, ஆர்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு முந்தைய 2019 ஜூலை விற்பனையில் 72 சதவீதத்தை, கடந்த ஜூலையில் நெருங்கி விட்டதாகவும் ஆர்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது. இது குறித்து இவ்வமைப்பின் தலைமை செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன் கூறியதாவது: நாட்டின் சில்லரை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்து பண்டிகை காலம் வர இருப்பதால், விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவுக்கு முந்தைய கால விற்பனையில் 50 சதவீதம், கடந்த ஜூன் மாதம் எட்டப் பட்டது. இது ஜூலையில் 72 சதவீதமாகி உள்ளது. தென் மாநிலங்களில் மட்டும் 82 சதவீதம் எட்டப்பட்டு விட்டது.இருப்பினும், மேற்கு மாநிலங்களில் நிலைமை இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. அங்கு 57 சதவீதம் அளவுக்கே எட்டப்பட்டுள்ளது.

ஜூலை மாத சில்லரை விற்பனையில், துரித உணவகங்கள் 97 சதவீதத்தை எட்டிவிட்டன. சலுான் உள்ளிட்டவற்றில் 50 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. ஆடைகள் விற்பனை 63 சதவீதத்தை தொட்டுவிட்டது.இந்நிலையில், மேற்கொண்டு மாநிலங்களில் தடை உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், பண்டிகை காலத்தில் விற்பனை பழைய நிலைக்கு நிச்சயம் திரும்பி விடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)