பதிவு செய்த நாள்
19 ஆக2021
19:42
புதுடில்லி:வீடுகள் விற்பனை நடப்பாண்டில், 30 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்றும், வீடுகளுக்கான தேவை கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும் என்றும் சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘அனராக்’ தெரிவித்துள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நடப்பாண்டில் 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 30 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 1.38 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், நடப்பாண்டில் விற்பனை 1.79 லட்சமாக அதிகரிக்கும்.
இதுவே கடந்த 2019ல், 2.61 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த 2020ம் ஆண்டு மிக சோதனையான ஆண்டாகும். இந்த ஆண்டை, துறையினர் விரைவில் மறந்து விடுவார்கள். வரும் ஆண்டுகளில் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|