பதிவு செய்த நாள்
20 ஆக2021
20:07
புதுடில்லி:இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், நடப்பாண்டில் இதுவரை 1.25 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, துணிகர முதலீட்டாளர்கள் வாயிலாக நிதி திரட்டி உள்ளது.
ஆசிய பசிபிக் நாடுகளில், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் இந்த வகையில் அதிகளவில் நிதி திரட்டியிருக்கும் நாடாகும்.லண்டனை தலைமையகமாக கொண்ட, தரவுகள் பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான, ‘குளோபல்டேட்டா’ இத்தகவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:உலகளவில் கொரோனா மூன்றாவது அலை மற்றும் மெதுவான பொருளாதார மீட்சி ஆகிய சவால்களை மீறி, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது, துணிகர முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இதனால், கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில், சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியாவில் அதிகஅளவிலான முதலீட்டை அவர்கள் மேற்கொண்டு இருக்கிறனர்.
மதிப்பீட்டு காலத்தில், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மொத்தம் 828 துணிகர முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு 1.25 லட்சம் கோடி ரூபாயாகும். ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பு, சகாயவிலையிலான இன்டர்நெட் வசதி ஆகியவற்றின் காரணமாக, இந்தியா டிஜிட்டல் நாடாக மாறி வருகிறது. இதனால், தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக பயனடைந்து வருகின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|