பதிவு செய்த நாள்
21 ஆக2021
19:44
புதுடில்லி:‘பி – நோட் ’எனும், ‘பங்கேற்பு பத்திரங்கள்’ வாயிலாக, இந்திய நிதி சந்தைகளில் செய்யப்பட்ட முதலீடு, ஜூலை மாதத்தில், கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்திய நிதி சந்தைகளில், இவ்வகையில் செய்யப்பட்ட முதலீடு, கடந்த ஜூலை மாத இறுதியில் 1.02 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவாகும். கடந்த 4 மாதங்களாகவே இந்த முதலீடு அதிகரித்து வருகிறது.நிதி சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தங்களை பதிவு செய்து கொள்ளாமல் முதலீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பு, பங்கேற்பு பத்திரங்கள் ஆகும்.
பதிவுபெற்ற எப்.பி.ஐ., எனும், அன்னிய முதலீட்டாளர்கள் இந்த பங்கேற்பு பத்திரங்களை, முதலீடு செய்ய விரும்புவோருக்கு வழங்குவர். இருப்பினும், இதற்கென சில நடைமுறைகளும் உள்ளன.கடந்த ஜூன் மாதத்தில், இந்திய நிதி சந்தைகளில் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக செய்யப்பட்டிருந்த முதலீடு, 92 ஆயிரத்து 261 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|