பதிவு செய்த நாள்
21 ஆக2021
20:51
புதுடில்லி:பங்கு சந்தை முதலீட்டாளர்கள், ராகுல் திராவிட் போல இருக்க வேண்டும் என, புதிதாக சந்தைக்கு வந்திருக்கும் ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
‘பென்குயின் ரேண்டம் ஹவுசஸ்’ வெளியிட்டுள்ள, ‘குப்பையில் மாணிக்கம்: அசாதாரண செல்வத்தை உருவாக்குவதற்கான நிலையான கலவை’ எனும் புத்தகத்தில், இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்காக இவ்வாறு கூறப்பட்டுள்ளது.மிகச் சிறந்த முதலீட்டாளர்கள், மிகச் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை போன்றவர்கள்.
அவர்கள் வலுவான தொழில்நுட்ப திறனும், வளர்ச்சி மனநிலையும் ஒருசேரப் பெற்றவர்கள். அந்த வகையில் ராகுல் திராவிட், பங்கு முதலீட்டாளர்களுக்கான மிகச் சிறந்த ஆதர்ச நாயகனாவார்.முதலீடு என்பது, ‘டி20 மேட்ச்’ போன்றதல்ல; ஒவ்வொரு பந்தையும் அடிக்க முயற்சி செய்வதற்கு. அது ஒரு டெஸ்ட் மேட்சை போன்றது. எல்லைக்கு அடிக்க வாய்ப்பு வரும்போது அடிப்பதாகும்.
முதலீட்டை பொறுத்தவரை, கிரிக்கெட்டில் நின்று, நிதானமாக ஆடுவதை போல பொறுமை தேவை. முதலில் ரிஸ்க் மிகுந்த பங்குகளை ஒதுக்கி தள்ளுங்கள். அதன் பிறகு, வளர்ச்சி பெறும் பங்குகளை சரியாக அடையாளம் கண்டு, பெரிதாக அடித்து ஆடுங்கள்.இவ்வாறு புத்தகத்தில், எழுதப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|