பதிவு செய்த நாள்
24 ஆக2021
20:34
மும்பை:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.5 சதவீத வளர்ச்சி அதிகமாக இருக்கும் என, எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையான,‘எகோரேப்’ தெரிவித்து உள்ளது.
இருப்பினும், இந்த கணிப்பானது ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட குறைவானதாகும். ரிசர்வ் வங்கி, முதல் காலாண்டில் வளர்ச்சியானது 21.4 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்றும், முதல் காலாண்டில் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, ஒப்பீட்டிற்கான கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டு நிலைமை மிக குறைவாக இருந்தது தான் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
போக்குவரத்து குறையும் போது, பொருளாதார செயல்பாடுகளும் குறைந்து, நாட்டின் வளர்ச்சியும் குறைகிறது. இருப்பினும், போக்குவரத்து அதிகரிக்கும்போது, பொருளாதார வளர்ச்சியும் அதே அளவுக்கு அதிகரிப்பதில்லை என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|