பதிவு செய்த நாள்
24 ஆக2021
20:39
மும்பை:பங்குச் சந்தை குறியீட்டு எண்களான, ‘சென்செக்ஸ், நிப்டி’ ஆகியவை மீண்டும் ஒரு புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளன.
நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 403 புள்ளிகள் அதிகரித்து, புதிய உச்சமான 55 ஆயிரத்து 958 புள்ளிகளைத் தொட்டு நிலைபெற்றது.இதேபோல், தேசிய பங்கு சந்தையின் நிப்டியும் 128 புள்ளிகள் அதிகரித்து, புதிய உச்சமான 16,625 புள்ளிகளில் நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், ‘பஜாஜ் பின்சர்வ்’ நிறுவன பங்குகள் அதிக விலை உயர்வை சந்தித்தன. ‘மியூச்சுவல் பண்டு’ வணிகத்துக்கான அனுமதி கிடைத்ததால், இந்நிறுவன பங்கு விலை கிட்டத்தட்ட 8 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. மேலும், நிதித் துறை சார்ந்த பங்குகள் பலவும் விலை உயர்ந்தன.
இந்த சந்தை உயர்வுக்கு, நிதியமைச்சரின் 6 லட்சம் கோடி ரூபாய்க்கான தேசிய பண மாக்கல் திட்டம் குறித்த அறிவிப்பும் முக்கிய காரணமாக அமைந்ததாக, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|