பதிவு செய்த நாள்
24 ஆக2021
20:48
புதுடில்லி:அண்மைக் காலமாக, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சந்தித்து வரும், ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாடு தற்காலிகமானது தான் என்றும், அடுத்த ஆண்டில் நிலைமை சரியாகிவிடும் என்றும், ‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:செமிகண்டக்டர் தட்டுப்பாடு தற்காலிகமானது. அடுத்த ஆண்டில் நிலைமை சரியாகி விடும். மின்சார வாகன பிரிவில் இறங்குவது குறித்து நிறுவனம் ஆலோசித்து வந்தாலும், மின்சார வாகனங்கள் விலை, மக்கள் வாங்கும் அளவுக்கு குறைந்து, நிறுவனத் தயாரிப்புக்கும் லாபம் கிடைக்கும் நிலை வரும்போது, நிச்சயமாக மின்சார வாகன தயாரிப்பில் நிறுவனம் நுழையும்.
தற்போது, அரசாங்கம் இருசக்கர மின்சார வாகனப் பிரிவில் தான் அதிக கவனம் செலுத்துகிறது. பயணியர் வாகன பிரிவை பொறுத்தவரை, வெகு சில நிறுவனங்களே மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளன. இவற்றின் விற்பனை மிகவும் குறைவாகவே இருக்கிறது. எனவே, மின்சார வாகன வரவால் மாருதி சுசூகி நிறுவனத்தின் சந்தை பங்களிப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|