பதிவு செய்த நாள்
24 ஆக2021
20:59
புனே:நிதிச் சேவைகளை வழங்கி வரும்,‘பஜாஜ் பின்சர்வ்’ நிறுவனம், மியூச்சுவல் பண்டு வணிகத்தை துவங்க, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து, இந்நிறுவனம் சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றையும், டிரஸ்டி நிறுவனம் ஒன்றையும் செபியின் விதிகளின் கீழ் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரித்து, 16 ஆயிரத்து 460 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 2.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்நிறுவனம், ‘பஜாஜ் ஹோல்டிங்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். இந்நிறுவனம் சொத்து மேலாண்மை, இன்சூரன்ஸ், முதலீடு ஆகிய வணிக சேவைகளை வழங்கி வருகிறது.அடுத்த கட்டமாக மியூச்சுவல் பண்டு வணிகத்திலும் இறங்குகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|