பதிவு செய்த நாள்
25 ஆக2021
20:37
புதுடில்லி:‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ நிறுவனம், எரிபொருளைக் கொண்டு செல்லும் குழாய்களை கண்காணிக்க, ‘ட்ரோன்’ எனும் ஆளில்லா சிறு விமானங்களை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
சுருக்கமாக ஐ.ஓ.சி., என அழைக்கப்படும் இந்நிறுவனம் ஏற்கனவே 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட பரந்துபட்ட குழாய் பதிப்புகளில் கசிவுகள் இருக்கின்றனவா என்பதை கண்டறிய, உயர் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இப்போது இந்த பணியில் கூடுதலாக ஆளில்லா சிறு விமானங்களையும் பயன்படுத்த உள்ளது.
இத்தகைய உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கடந்த நிதியாண்டில் மட்டும் எரிபொருளை திருடிய 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிறு விமானங்களை பயன்படுத்துவதன் மூலம், கசிவு மற்றும் திருட்டை கூடுதலாக கண்காணித்து தடுக்க முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|