பதிவு செய்த நாள்
25 ஆக2021
21:10
புதுடில்லி:‘யெஸ் பேங்க்’ முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ராணா கபூரின் முடக்கப்பட்டிருந்த வங்கி கணக்குகள், பங்கு மற்றும் பரஸ்பர நிதி ஆகியவற்றை விடுவிக்க பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ உத்தரவிட்டுள்ளது.
ராணா கபூர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், யெஸ் பேங்க் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் ஒரு கோடி ரூபாய் அபராத தொகையை வசூலிக்கும் வகையில், இவரது வங்கி கணக்கு உள்ளிட்டவற்றை முடக்கியது செபி.
இதன் தொடர்ச்சியாக, ராணா கபூர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதையடுத்து, உச்ச நீதிமன்றம் 50 லட்சம் ரூபாயை செலுத்த சொல்லி, செபியின் அபராதத்தை நிறுத்தி வைக்க இடைக்கால உத்தரவிட்டது.இதனையடுத்து, தற்போது இவரது கணக்குகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது, செபி.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|