பதிவு செய்த நாள்
27 ஆக2021
21:04
புதுடில்லி:செயற்கைகோளை ஏவுவதற்கான வாகனமான, ‘பி.எஸ்.எல்.வி., ராக்கெட்’ தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்ற, ‘அதானி குழுமம்’ உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் போட்டியில் இறங்கி உள்ளன.
ஒப்பந்தம்
அதானி குழுமத்தின் தலைமையிலான கூட்டமைப்பு, எல் அண்டு டி., தலைமையிலான கூட்டமைப்பு, பி.எச்.இ.எல்., ஆகியவை போட்டி போடுகின்றன.மொத்தம் 5 ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தமாகும். இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஐ.எஸ்.ஆர்.ஓ.,வுக்கு வெளியே உள்ள நிறுவனங்கள், முதன் முதலாக செயற்கை கோளை ஏவுவதற்கான வாகனத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை, முற்றாகதயாரிக்க உள்ளன.
இந்த ஆண்டு இறுதியில் ஒப்பந்தத்துக்கான நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும் என தெரிகிறது.
மூன்று நிறுவனங்கள்மேற்சொன்ன மூன்று நிறுவனங்களும், கடந்த ஜூலை இறுதியில்
தங்களுடைய ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்தன.வெளி நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதன் வாயிலாக, வரும் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட வாய்ப்புஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|