1 லட்சம் கோடி ரூபாய் ஐ.ஓ.சி., முதலீடு செய்கிறது1 லட்சம் கோடி ரூபாய் ஐ.ஓ.சி., முதலீடு செய்கிறது ...  அன்னிய நேரடி முதலீடு இரு மடங்கு அதிகரிப்பு அன்னிய நேரடி முதலீடு இரு மடங்கு அதிகரிப்பு ...
வருமான வரி தாக்கல் அவகாசம் கேட்டு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2021
19:36

புதுடில்லி:கடந்த 2020 -- 21ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை, நீட்டிக்க வேண்டும் என பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழத் துவங்கி உள்ளன.

வருமான வரி தாக்கலுக்கான கடைசி தேதி செப்டம்பர் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கணக்கை தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளத்தில் பிரச்னைகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை. சிக்கல்கள் நீடிக்கின்றன. மேலும், ஆகஸ்ட் 21 மற்றும் 22ல் இணையதளம் முற்றாக செயல்படவில்லை.

இந்நிலையில், காலக்கெடுவை மீண்டும் நீட்டிக்க கோரி கோரிக்கைகள் எழத் துவங்கி உள்ளன.இது குறித்து துறையின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இணையதள பிரச்னைகள் அனைத்தும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தீர்க்கப்பட்டு விட வேண்டும் என, 'இன்போசிஸ்' நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பார்த்தால், தனிநபர்களுக்கு கணக்கு தாக்கல் செய்ய 15 நாட்கள் அவகாசம் மட்டுமே கிடைக்கும். இதற்குள் அனைவரும் தாக்கல் செய்வது கடினம் என்பதால், கால அவகாசத்தை நீட்டிக்கும் கோரிக்கை பல முனைகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கின்றது.

கடந்த ஆண்டில் பல முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. முதலில் ஜூலை 31. அதன்பின் நவம்பர் 30. அதன்பின் டிசம்பர் 31 என்றும், அடுத்து இறுதியாக ஜனவரி 10 என்றும் தொடர்ந்து அவகாசம் நீட்டிக்கப்பட்டது.அதேபோல், இந்த ஆண்டிலும் அவகாசம் நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பே அனைத்து தரப்பிலும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)