ஆறாம் கட்ட தங்க பத்திர வெளியீடு ஒரு கிராம் விலை 4,732 ரூபாய் ஆறாம் கட்ட தங்க பத்திர வெளியீடு ஒரு கிராம் விலை 4,732 ரூபாய் ...  புதிய வீட்டை நாடும் இந்தியர்கள் புதிய வீட்டை நாடும் இந்தியர்கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்த வாரத்தில் இரண்டு புதிய பங்கு வெளியீடுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2021
19:46

புதுடில்லி:இந்த வாரத்தில் இரண்டு நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது உறுதியாகியுள்ளது. ‘ஆமி ஆர்கானிக்ஸ் மற்றும் விஜயா டயாக்னாஸ்டிக் சென்டர்’ ஆகிய இரு நிறுவனங்களின் பங்கு வெளியீடு செப்டம்பர் 1ம் தேதியன்று துவங்குகிறது.

ஆமி ஆர்கானிக்ஸ்:

ரசாயன துறையை சேர்ந்த ஆமி ஆர்கானிக்ஸ் நிறுவனம், செப்டம்பர் 1ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, இந்நிறுவனம், அதன் பங்கு விலையை 603 – 610 ரூபாய் என நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளது.சிறப்பு வகை ரசாயன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக, 570 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் பங்கு வெளியீடு செப்டம்பர் 1ம் தேதி துவங்கி, 3ம் தேதியன்று முடிவடைகிறது.

திரட்டப்படும் நிதியை கொண்டு, கடனை அடைக்கவும், நடைமுறை மூலதன செலவுகளுக்கு பயன்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.பங்கு வெளியீட்டில், 50 சதவீத பங்குகள் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்காகவும், 35 சதவீத பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்காகவும், மீதி 15 சதவீத பங்குகள் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட உள்ளன.

கடந்த 2018ம் ஆண்டில் ஒரு முறை பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக முயற்சி எடுத்து, பின் அது நிறைவேறாமல் போய்விட்டது. இதனையடுத்து தற்போது வருகிறது.

விஜயா டயாக்னாஸ்டிக்:

இதே செப்டம்பர் 1ம் தேதியன்று, ‘விஜயா டயாக்னாஸ்டிக் சென்டர்’ நிறுவனமும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இதன் ஒரு பங்கின் விலை 522 – 531 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம் 1,895 கோடி ரூபாய் நிதியை திரட்ட உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)