பதிவு செய்த நாள்
31 ஆக2021
21:38
புதுடில்லி:உலகளாவிய தொழில்நுட்ப முதலீட்டு நிறுவனமான,‘புரோசஸ் என்.வி.,’ இந்தியாவின் பணப்பரிவர்த்தனை தளமான, ‘பில்டெஸ்க்’ நிறுவனத்தை, 34 ஆயிரத்து, 310 கோடி ரூபாய்க்கு வாங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
புரோசஸ் நிறுவனம், இந்தியாவில் அதன், ‘பே யூ’ வணிகத்தை மேம்படுத்துவதற்காக இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கையில் இறங்க உள்ளது. இந்த கையகப்படுத்துதல் வாயிலாக, தற்போது பே யூ வாயிலாக நடக்கும் பரிவர்த்தனைகள், நான்கு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பில்டெஸ்க் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய ‘பேமென்ட்’ தளமாகும். கடந்த 2000மாவது ஆண்டில் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. மிகப் பெரிய அளவிலான நடவடிக்கையாக கருதப்படுகிறது இது. இருப்பினும், இந்திய சந்தை போட்டிகள் ஆணையத்தின் அனுமதியை பொறுத்தே இது நிறைவேறும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|