பதிவு செய்த நாள்
31 ஆக2021
21:40
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ‘டிட்கோ’வின் கூட்டாண்மை நிறுவனமான, ‘டைடல் பார்க்’ நிறுவனம், தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50 ஆயிரம் முதல், 1 லட்சம் சதுர அடி பரப்பளவில், மினி டைடல் பார்க்குகளை அமைக்க உள்ளது.
இந்த டைடல் பூங்காக்களை அமைக்க தேவையான நிலங்களை அரசு வழங்க உள்ளது. டைடல் நிறுவனத்தால் அமைக்கப்படும் சிறப்பு நோக்கு நிறுவனத்தில், அரசின் பிரதிநிதியாக டிட்கோ நிறுவனம் ஒரு பங்குதாரராக செயல்படும்.முதல் கட்டமாக, விழுப்புரம், துாத்துக்குடி, வேலுார் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில், மினி டைடல் பார்க்குகளை டைடல் நிறுவனம் அமைக்கும்.
இதர நகரங்களில் படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.மேலும், கோவை மாவட்டம், சூலுார் அருகில் வரப்பட்டியில், 500 ஏக்கர் நிலங்களையும், அன்னுாரில், 1,000 ஏக்கர் நிலங்களையும், பாதுகாப்பு தொழில் பூங்கா அமைப்பதற்கான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|