பதிவு செய்த நாள்
01 செப்2021
20:21
புதுடில்லி:‘ஐ.எச்.எஸ்., மார்கிட் இந்தியா’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளை சேர்ந்த, 400 நிறுவனங்களின், ஆகஸ்ட் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி ஓரளவு உயர்ந்து, 52.3 புள்ளிகளாக உள்ளது.கொரோனா பரவல் மற்றும் உள்ளீட்டு செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால், வணிக ‘ஆர்டர்’கள் மற்றும் உற்பத்தி குறைந்த அளவிலேயே ஆகஸ்டில் அதிகரித்துள்ளது.கடந்த ஜூலையில் இதுவே 55.3 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், நாட்டின் தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து இரு மாதங்களாக ஒட்டுமொத்தத்தில் அதிகரித்தே உள்ளது.பி.எம்.ஐ., குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.இந்த வகையில், தொடர்ந்து இரு மாதங்களாக வளர்ச்சி காணப்பட்டாலும், தொற்றுநோய் பரவல் உள்ளிட்ட காரணங்களால் வளர்ச்சி பலகீனமாகி, வேகத்தை இழந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|