ஸ்பாட்டன் நிறுவனத்தைக் கைப்பற்றிய டெல்லிவெரி லாஜிஸ்டிக் ஸ்பாட்டன் நிறுவனத்தைக் கைப்பற்றிய டெல்லிவெரி லாஜிஸ்டிக் ...  பொருளாதாரம் மீட்சி அடைந்தாலும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு பொருளாதாரம் மீட்சி அடைந்தாலும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘சிப்’ தட்டுப்பாடு காரணமாக மகிந்திரா உற்பத்தி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2021
20:20

புதுடில்லி:‘சிப்’ என அழைக்கப்படும் ‘செமி கண்டக்டர்கள்’ தட்டுப்பாடு காரணமாக, நடப்பு செப்டம்பர் மாதத்தில் வாகன தயாரிப்பு 20 – 25 சதவீதம் வரை பாதிக்கப்படும் என, ‘மகிந்திரா அண்டு மகிந்திரா’ நிறுவனம் தெரிவித்து உள்ளது.

செமி கண்டக்டர்கள்

அண்மைக் காலமாகவே உலகெங்கிலும் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள், செமி கண்டக்டர் பற்றாக்குறையால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. மேலும், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் துறையினருக்கும் செமி கண்டக்டர்கள் தேவைப்படுவதால் தட்டுப்பாடும், போட்டியும் மேலும் அதிகரித்துள்ளது.இத்தகைய சூழலை அடுத்து, மகிந்திரா நிறுவனம் அதன் வாகன தயாரிப்பு ஆலைகளில் இம்மாதத்தில் ஏழு நாட்களை உற்பத்தி இல்லாத நாட்களாக அறிவித்துள்ளதாக பங்குச் சந்தைகளுக்கு தெரிவித்துள்ளது.

மேலும், உற்பத்தி அளவு குறைவதால் அது நிறுவனத்தின் வருவாயையும், லாபத்தையும் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.இருப்பினும், டிராக்டர் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி, லாரி மற்றும் பஸ் தயாரிப்புகள் இதனால் எந்த பாதிப்பையும் அடையவில்லை என்றும் மகிந்திரா தெரிவித்துள்ளது.

தட்டுப்பாடு

இதற்கு முன், ‘மாருதி சுசூகி’ நிறுவனமும் செமி கண்டக்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, இம்மாதத்தில் அதன் ஹரியானா மற்றும் குஜராத்தில் உள்ள ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)