‘சிப்காட்’ தொழில் பூங்கா எல்லைகளில் பனை மரங்கள் ‘சிப்காட்’ தொழில் பூங்கா எல்லைகளில் பனை மரங்கள் ...  ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆகஸ்டில் சேவைகள் துறை வளர்ச்சி ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆகஸ்டில் சேவைகள் துறை வளர்ச்சி ...
இது புதிய பசுமை புரட்சியாகும்: முகேஷ் அம்பானி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2021
19:36

மும்பை:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, அடுத்த பத்து ஆண்டுகளில், ‘பசுமை ஹைட்ரஜன்’ விலையை, 1 கிலோவுக்கு ஒரு டாலர், அதாவது, கிட்டத்தட்ட 73 ரூபாயாக குறைத்துவிட முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

‘சர்வதேச காலநிலை உச்சி மாநாடு – 2021’ல் பங்கேற்று அவர் பேசியபோது, இவ்வாறு கூறியுள்ளார்.பசுமை ஹைட்ரஜன் என்பது, காற்று அல்லது சூரிய மின்சக்தி மூலம், மின்னாற்பகுப்பு முறையில், தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை பிரித்து தயாரிக்கப்படுவதுஆகும்.

இந்த பசுமை ஹைட்ரஜனை, போக்குவரத்துக்கான எரிபொருளாகவும், மேலும் பல வகைகளிலும் பயன்படுத்தலாம்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:பத்து ஆண்டுகளுக்குள்ளாக, பசுமை ஹைட்ரஜன் விலையை, ஒரு டாலருக்கும் குறைவாக கொண்டுவர இந்தியா இலக்கை நிர்ணயித்து, அதை அடையலாம் என உறுதியாக நம்புகிறேன்.

அப்படி முடிந்தால், இந்தியா தான் உலகளவில் முதன் முதலாக, ‘ஒரு தாசாப்தம் – ஒரு டாலர் – ஒரு கிலோ’ என, 1–1–1 என்ற இலக்கை எட்டியதாக இருக்கும்.இது புதிய பசுமை புரட்சிஆகும். பழைய பசுமைப் புரட்சி, உணவு உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்தது. புதிய பசுமைப் புரட்சி, இந்தியாவை எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு பெற உதவுவதாக இருக்கும்.

புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை பொறுத்தவரை, இந்தியா 300 நாட்கள் சூரிய பெறும் நாடாக இருப்பதால், மிக குறைந்த இடத்தில், மிக குறைந்த செலவில், சூரியஒளி மின்சாரத்தை தயாரிக்க முடியும். நம் நிலத்தில் வெறும் 0.5 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தி, 1,000 கிகா வாட் மின்சாரத்தை தயாரித்துவிட முடியும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2030ல், 100 கிகா வாட் புதிப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய திட்டமிட்டுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)