பதிவு செய்த நாள்
04 செப்2021
19:09
புதுடில்லி:‘ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனம், ‘ஹேப்பி ஷாப்’ எனும் பிராண்டில், புதிய விற்பனையகத்தை துவங்கி உள்ளது.இந்த ஹேப்பி ஷாப், எரிபொருள் அல்லாத சில்லரை விற்பனை ஸ்டோராகும்.
உலகெங்கிலும் உள்ள எரிபொருள் சில்லரை விற்பனை நிறுவனங்கள், தங்கள் வருவாயை அதிகரிக்க, இது போன்று எரிபொருள் அல்லாத பிற பொருட்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றன.இதை அடியொற்றி, நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய எரிபொருள் சில்லரை விற்பனை நிறுவனமான, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும், இந்த முயற்சியில் இறங்கி உள்ளது.
உலகின் பல நாடுகளில் உள்ள பெட்ரோலிய விற்பனை நிறுவனங்கள், தங்கள் மொத்த வருவாயில் 40 முதல் 50 சதவீதத்தை இத்தகைய ஸ்டோர்கள் வாயிலாக ஈட்டி வருகின்றன. ஆனால் இந்தியாவில் இது, வெறும் 4 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது. முதற்கட்டமாக தன்னுடைய ஹேப்பி ஷாப்பை, மும்பையில் துவங்கி உள்ளது, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்.
இங்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள், உணவு பொருட்கள், துாய்மை பொருட்கள், மளிகை, மருந்து பொருட்கள், பேக்கரி அயிட்டங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த முயற்சி ஒரு சடங்காக முடியுமா அல்லது வெற்றியை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|