பதிவு செய்த நாள்
04 செப்2021
19:26
புதுடில்லி:கடந்த 5 மாதங்களில், வருமான வரி ரீபண்டாக 67 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என, வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து மேலும் அறிவித்துள்ளதாவது:நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், வருமான வரி ரீபண்டாக கிட்டத்தட்ட 67 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.ஏப்ரல் ௧ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்த தொகை மொத்தம் 23.99 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது.இதில் வருமான வரி தாக்கல் செய்த 22.61 லட்சம் பேருக்கு, 16 ஆயிரத்து 373 கோடி ரூபாய் ரீபண்டாக வழங்கப் பட்டு உள்ளது.
மேலும், நிறுவன வரி செலுத்திய 1.37 கணக்குகளுக்கு, ரீபண்டு தொகையாக 51 ஆயிரத்து 29 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு வருமான வரி துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, தனிநபர் வருமான வரி தாக்கலுக்கு கடைசி நாள் இம்மாதம் 30ம் தேதி என்று இருக்கும் நிலையில், கெடு நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|