பதிவு செய்த நாள்
04 செப்2021
19:34
மும்பை:தனியார் ஆயுள் காப்பீட்டு துறையை சேர்ந்த, ‘எச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ்’ நிறுவனம், ‘எக்ஸைடு லைப் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தை கையகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.கிட்டத்தட்ட 6,687 கோடி ரூபாயில், எச்.டி.எப்.சி., இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
இதற்கு இரு நிறுவனங்களின் நிர்வாக குழுவும் அனுமதி வழங்கி உள்ளன. கையகப் படுத்தும் நடைமுறைகள் முடிந்ததும், இரு நிறுவனங்களின் இணைப்பும் மேற்கொள்ளப் படும் என எச்.டி.எப்.சி., தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து, எச்.டி.எப்.சி., லைப் தலைவர் தீபக் பரேக் கூறியதாவது:இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில், முதன் முறையாக இவ்வளவு பெரிய ‘டீல்’ மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நடவடிக்கை, காப்பீட்டு வணிகத்தை மேம்படுத்தவும்; பரந்துபட்ட வாடிக்கையாளர் களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதற்கான எங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றவும் உதவுவதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|