பதிவு செய்த நாள்
04 செப்2021
20:07
புதுடில்லி:‘இ.எஸ்.டி.எஸ்., சாப்ட்வேர் சொலுாஷன்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, இம்மாத இறுதிக்குள் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,‘செபி’க்கு விண்ணப்பிக்கும் எனத் தெரிகிறது.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,200 – 1300 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம், ‘கிளவுடு’ சேவைகள், தரவு மைய சேவைகள், தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.பியுஷ் சோமானி என்பவரால் இந்நிறுவனம் 2005ம் ஆண்டில் துவங்கப்பட்டது.
கடந்த 2015ம் ஆண்டில், கனரா வங்கியின் துணை நிறுவனமான, ‘கேன்பேங்க் வெஞ்சர்’ இதில் 25 கோடி ரூபாயை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.‘டாடா கேப்பிட்டல், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ், முத்துாட் குழுமம், யூனியன் பேங்க், டி.சி.பி., பேங்க்’ போன்றவை இதன் குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்களாகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|