பணியிட தேர்வில் நிகழும் மாற்றம் பணியிட தேர்வில் நிகழும் மாற்றம் ...  ரூ.7,900 கோடி தந்தால் வழக்கு வாபஸ்: கெய்ர்ன் ரூ.7,900 கோடி தந்தால் வழக்கு வாபஸ்: கெய்ர்ன் ...
இந்தியாவின் முதல் கிளவுட் கேமிங் சோதனையை 5ஜி நெட்வொர்க்கில் வழங்கும் ஏர்டெல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2021
20:03

தொலைத்தொடர்பு துறையில் 5ஜி சேவையை வழங்கும் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் லிமிடெட் இந்தியாவின் முதல் கிளவுட் கேமிங் அமர்வை 5ஜி சூழலில் வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்புத் துறையால் (இந்திய அரசு) ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்தி 5ஜி சோதனைகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை மானேசரில் நடத்தப்பட்டது. இந்த 5ஜி க்ளவுட் கேமிங் சோதனைக்காக ஏர்டெல் இந்தியாவின் முன்னனி கேமர்களான மார்டல், (நமன் மாதுர்) மற்றும் மாம்பா (சல்மான் அஹமது) ஆகியோருடன் இணைந்துள்ளது. பிளாக்நட்டிலிருந்து கேமிங் டெக்னாலஜி தளத்தை மேம்படுத்தி, ஆஸ்பால்ட்டில் ஒரு வேகமான ரேசிங் பந்தயத்தை அவர்களுக்கு வழங்கியது. அவர்கள் அதிவேகமான மற்றும் மிகக் குறைந்த தாமதங்களைத் தரும் 5 ஜி சூழலில் தங்களின் கேமிங் திறன்களை சோதித்தனர்.

3500 மெகா ஹெர்ட்ஸ் உயர் திறன் கொண்ட ஸ்பெக்ட்ரம் பேண்டுடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மார்டல் மற்றும் மாம்பா இந்த சிறந்த அமர்வை அனுபவித்தனர். 5ஜி சோதனை நெட்வொர்க் ஒரு நொடிக்கு 1ஜிபிக்கும் அதிகமான வேகத்தையும் 10 மில்லி விநாடிகளின் வரம்பில் தாமதத்தையும் வழங்கியது.

கேமிங் அனுபவத்தை விவரித்துப் பேசிய மார்டல் மற்றும் மாம்பா, "நாங்கள் முற்றிலும் மெய்சிலிர்த்துவிட்டோம். இது ஸ்மார்ட்போனில் உயர்நிலை கணினி மற்றும் கன்சோல்-தர கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. 5 ஜி இந்தியாவில் ஆன்லைன் கேமிங்கை சிறந்த உயரத்திற்கு எடுத்துச் செல்லும். இந்த அருமையான வாய்ப்பை எங்களுக்கு அளித்த ஏர்டெல் நிறுவனத்திற்கு நன்றி” எனத் தெரிவித்தனர்.

பாரதி ஏர்டெலின் சிடிஓ, ரன்தீப் செக்கோன் பேசுகையில், "கிளவுட் கேமிங் 5ஜியின் மிகப்பெரிய பயன்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும். இது அதிவேகம் மற்றும் குறைந்த தாமதம் ஆகியவற்றின் கலவையாகும். சோதனை நெட்வொர்க்கில் இந்தியாவின் முதல் 5 ஜி டெமோவை வழங்கிய பிறகு, இந்த அற்புதமான 5 ஜி கேமிங் அமர்வை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகின் மற்றொரு பகுதியில் அமர்ந்திருக்கும் ஒருவருடன் நிகழ்நேர கேமிங்கை அனுபவிப்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்தியாவில் 5 ஜி-யை வெளியிடுவதற்கு ஏர்டெல் தயாராகும் நிலையில், இது ஒரு அற்புதமான டிஜிட்டல் எதிர்காலத்தின் தொடக்கமாகும்” எனத் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)