பதிவு செய்த நாள்
08 செப்2021
20:05
புதுடில்லி:கடந்த ஐந்து ஆண்டுகளில், முதலீட்டாளர் குறைகள் தொடர்பான, 18 ஆயிரம் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக, முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.
முதலீடுகள் தொடர்பான கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முதிர்ச்சியடைந்த டிபாசிட்டுகள், கோரப்படாத டிவிடெண்டுகள், பங்குகள் ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும், ஐ.இ.பி.எப்.ஏ., எனப்படும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் உருவாக்கப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த ஆணையம், முதலீட்டாளர்களின், 18 ஆயிரம் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. அத்துடன், 1,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு டிவிடெண்டு, முதிர்ச்சிஅடைந்து கோரப்படாத டிபாசிட்டுகள் ஆகியவற்றை, உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்துள்ளது.
பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து, 1.25 கோடி பங்குகளை பெற்று, அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கியுள்ளது. மக்களிடம், நிதிச் சந்தை செயல்பாடுகள் பற்றிய கல்வியறிவு குறைவாக இருப்பதால், முதலீடுகள், வருவாய் ஆகியவை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. எனவே, மாணவர்கள், கிராமப்புறத்தினர் உட்பட அனைவரும் நிதிச் சந்தை செயல்பாடுகளை அறிய, ஐ.இ.பி.எப்.ஏ., நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|