பதிவு செய்த நாள்
08 செப்2021
20:10
ஆமதாபாத்:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக, எம்.ஏ.எஸ்., பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், பேங்க் ஆப் பரோடா உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
வங்கி சாரா நிதி நிறுவனமான, எம்.ஏ.எஸ்., பைனான்சியல், 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், 99 கிளைகளுடன் இயங்கி வருகிறது. கிராமப்புறம், புறநகர் பகுதிகளில், 3,480 சேவை மையங்கள் வாயிலாக, குறைந்த மற்றும் நடுத்தர வருவாயினருக்கு கடன் வழங்கி வருகிறது.
இந்நிறுவனம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக பேங்க் ஆப் பரோடா உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ‘இதன் வாயிலாக, நகர்புறம், கிராமப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சுலபமாக கடன் பெற முடியும்’ என, இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
குறு, சிறு, நடுத்தர தொழில்களுடன், வீட்டு வசதி, வர்த்தக வாகனம், இரு சக்கர வாகனம், பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றுக்கும், எம்.ஏ.எஸ்., பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் கடன் வழங்குகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|