பதிவு செய்த நாள்
08 செப்2021
20:15
புதுடில்லி:‘‘மத்திய அரசின் பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களால், நிதிதொழில்நுட்ப சந்தை, 2025ல், மூன்று மடங்கு உயர்ந்து, 6 லட்சத்து 20 ஆயிரத்து 700 கோடி ரூபாயாக உயரும்,’’ என, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள், நிதிதொழில்நுட்ப துறையில் உள்ளன. இந்நிறுவனங்கள், இணையம் வழியே நிதிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை சுலபமாக மேற்கொள்ள உதவுகின்றன. ‘மொபிக்விக், பேடிஎம், பேபால்’ போன்ற நிறுவனங்ளை இதற்கு உதாரணமாக கூறலாம்.
இந்நிலையில், டில்லியில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான – அசோசெம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் பகவத் காரத் பேசியதாவது:மத்திய அரசு ‘டிஜிட்டல் இந்தியா’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், மின்னணு தொழில்நுட்ப துறை வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறது.இதனால், வளரும் நாடுகளில் நிதிதொழில்நுட்ப பயன்பாட்டில், இந்தியா, குறுகிய காலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது.
உலக நாடுகளின் நிதிதொழில்நுட்ப பயன்பாட்டு வளர்ச்சி, சராசரியாக, 64 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில், 87 சதவீதமாக உயர்ந்து காணப்படுகிறது. கடந்த 2019ல், நாட்டின் நிதிதொழில்நுட்ப சந்தை மதிப்பு, ஆயிரத்து 920 கோடி ரூபாயாக இருந்தது.
இது, மூன்று மடங்கு உயர்ந்து, 2025ல், 6 லட்சத்து 20 ஆயிரத்து 700 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இதனால், நிதிதொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ஏராளமான வல்லுனர்கள் உருவாகுவர். இதன் காரணமாக, நிதிதொழில்நுட்பத்தின் மையமாக, இந்தியா உருவெடுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
‘டாப்’ 10 நிறுவனங்கள்
பேடிஎம், மொபிக்விக், லென்டிங்கார்ட், ரேசர்பே,பாலிசிபஜார்,கேப்பிடல் புளோட்,பைன் லேப்ஸ்,போன்பி,பில்டெஸ்க்,கிளியர்டேக்ஸ்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|