1,349 நிறுவன சொத்து விற்பனை: இந்திய திவால் வாரியம் 1,349 நிறுவன சொத்து விற்பனை: இந்திய திவால் வாரியம் ...  சீன ‘வைட்டமின் – சி’ மீது பொருள் குவிப்பு வரி சீன ‘வைட்டமின் – சி’ மீது பொருள் குவிப்பு வரி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதிதொழில்நுட்ப சந்தை மதிப்பு ரூ.6.20 லட்சம் கோடியாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2021
20:15

புதுடில்லி:‘‘மத்திய அரசின் பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களால், நிதிதொழில்நுட்ப சந்தை, 2025ல், மூன்று மடங்கு உயர்ந்து, 6 லட்சத்து 20 ஆயிரத்து 700 கோடி ரூபாயாக உயரும்,’’ என, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள், நிதிதொழில்நுட்ப துறையில் உள்ளன. இந்நிறுவனங்கள், இணையம் வழியே நிதிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை சுலபமாக மேற்கொள்ள உதவுகின்றன. ‘மொபிக்விக், பேடிஎம், பேபால்’ போன்ற நிறுவனங்ளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்நிலையில், டில்லியில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான – அசோசெம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் பகவத் காரத் பேசியதாவது:மத்திய அரசு ‘டிஜிட்டல் இந்தியா’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், மின்னணு தொழில்நுட்ப துறை வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறது.இதனால், வளரும் நாடுகளில் நிதிதொழில்நுட்ப பயன்பாட்டில், இந்தியா, குறுகிய காலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது.

உலக நாடுகளின் நிதிதொழில்நுட்ப பயன்பாட்டு வளர்ச்சி, சராசரியாக, 64 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில், 87 சதவீதமாக உயர்ந்து காணப்படுகிறது. கடந்த 2019ல், நாட்டின் நிதிதொழில்நுட்ப சந்தை மதிப்பு, ஆயிரத்து 920 கோடி ரூபாயாக இருந்தது.

இது, மூன்று மடங்கு உயர்ந்து, 2025ல், 6 லட்சத்து 20 ஆயிரத்து 700 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இதனால், நிதிதொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ஏராளமான வல்லுனர்கள் உருவாகுவர். இதன் காரணமாக, நிதிதொழில்நுட்பத்தின் மையமாக, இந்தியா உருவெடுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

‘டாப்’ 10 நிறுவனங்கள்

பேடிஎம், மொபிக்விக், லென்டிங்கார்ட், ரேசர்பே,பாலிசிபஜார்,கேப்பிடல் புளோட்,பைன் லேப்ஸ்,போன்பி,பில்டெஸ்க்,கிளியர்டேக்ஸ்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)