பதிவு செய்த நாள்
08 செப்2021
20:17
புதுடில்லி:சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ‘வைட்டமின் – சி’ ஊட்டச் சத்து பவுடருக்கு, பொருள் குவிப்பு வரி விதிக்க, வர்த்தக குறை தீர்ப்பு தலைமை இயக்குனரகம், மத்திய நிதியமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து, இந்த இயக்குனரகம் வெளியிட்டு உள்ள அறிக்கை விபரம்:சீனாவில் இருந்து, இந்திய மருந்து நிறுவனங்கள் வைட்டமின் – சி பவுடரை இறக்குமதி செய்கின்றன. ஆனால், அதன் விலை, உள்நாட்டு வைட்டமின் – சி விற்பனை விலையை விட குறைவாக இருப்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதனால், இத்துறையில் உள்ள உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் வைட்டமின் – சி பவுடருக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு வரி விதிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. ௧ கிலோ வைட்டமின் – சி பவுடருக்கு, 240 – 266 ரூபாய் வரை வரி விதிக்கலாம்.
இதன் மூலம், உள்நாட்டில் வைட்டமின் – சி விற்கப்படும் விலைக்கு குறைவாக, சீன இறக்குமதியை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் விரைவில் முடிவு எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|