பதிவு செய்த நாள்
09 செப்2021
21:17
புதுடில்லி:கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதால், இந்திய நிறுவனங்கள், 2022ல், 9.4 சதவீத ஊதிய உயர்வு தர திட்டமிட்டுள்ளன.
இது குறித்து, ஏஆன்நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா காலத்தில் ‘டிஜிட்டல்’ எனப்படும் மின்னணு தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், நடப்பாண்டு, இதர துறைகளை விட, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப துறை ஊழியர்களின் ஊதியம் உயர்ந்துள்ளது. அதேசமயம், பெரும்பாலான துறைகள்,கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற, இத்துறைகளைச் சேர்ந்த, 98.5 சதவீத நிறுவனங்கள், 2022ல், ஊழியர்களின் ஊதியத்தை, 9.4 சதவீதம் உயர்த்தி தர திட்டமிட்டுள்ளன. நடப்பாண்டு, 97.5 சதவீத நிறுவனங்கள் ஊதியத்தை உயர்த்தி உள்ளதாக கூறியுள்ளன. கடந்த, 2020ல், ஊதிய உயர்வு, 6.1 சதவீதமாக இருந்தது. இது, இந்தாண்டு, சராசரியாக, 8.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|