மின் வாகன ‘சார்ஜ்’ மையம் ரிலையன்ஸ்–பி.பி., ஒப்பந்தம் மின் வாகன ‘சார்ஜ்’ மையம் ரிலையன்ஸ்–பி.பி., ஒப்பந்தம் ...  பியூச்சர் – அமேசான் வழக்கு உச்ச நீதிமன்றம் தடை பியூச்சர் – அமேசான் வழக்கு உச்ச நீதிமன்றம் தடை ...
ரிலையன்சுக்கு ரூ.4,660 கோடி இழப்பீடு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2021
21:27

புதுடில்லி:‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், 4ஆயிரத்து 660 கோடி ரூபாய் இழப்பீடு தருமாறு மத்தியஸ்த தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு செல்லும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 2008ல், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ப்ரா., நிறுவனம், டில்லி விமான நிலைய மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. சில ஆண்டுகளில், இரு நிறுவனங்கள் இடையே, கட்டணம் மற்றும் பணிகள் தொடர்பாக மோதல் எழுந்தது.

இதையடுத்து, 2012ல், அந்த திட்டத்தில் இருந்து ரிலையன்ஸ் இன்ப்ரா., விலகியது.அத்துடன், அதுவரை மேற்கொண்ட பணிகளுக்காக, டில்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இழப்பீடு கோரி, மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இவ்வழக்கில் ‘டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், ரிலையன்ஸ் இன்ப்ரா.,விற்கு, வட்டி உட்பட, 4ஆயிரத்து 660 கோடி ரூபாய் வழங்க வேண்டும்’ என, தீர்ப்பானது.

இதை எதிர்த்து, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ‘மத்தியஸ்த தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு செல்லும். டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், ரிலையன்ஸ் இன்ப்ரா.,விற்கு, 4ஆயிரத்து 650 கோடி ரூபாய் வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு, 14ஆயிரம் கோடி ரூபாய் கடன் காரணமாக, திவால் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள அனில் அம்பானியின் நெருக்கடியை குறைக்க உதவும் என கருதப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)