ரிலையன்சுக்கு ரூ.4,660 கோடி இழப்பீடு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ரிலையன்சுக்கு ரூ.4,660 கோடி இழப்பீடு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ...  வேளாண் ஏற்றுமதி சலுகையில் பால் பண்ணை பொருள் சேர்ப்பு வேளாண் ஏற்றுமதி சலுகையில் பால் பண்ணை பொருள் சேர்ப்பு ...
பியூச்சர் – அமேசான் வழக்கு உச்ச நீதிமன்றம் தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2021
21:32

புதுடில்லி:‘பியூச்சர் ரீடெய்ல் – அமேசான் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, டில்லி உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் எந்த முடிவும் எடுக்கக் கூடாது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பியூச்சர் ரீடெய்ல் நிறுவனம், ‘பிக் பஜார்’ என்ற பெயரில் பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் சில்லரை வர்த்தகத்தை, 24ஆயிரத்து 731 கோடி ரூபாய்க்கு வாங்க, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதை எதிர்த்து, பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில், பங்கு முதலீடு செய்துள்ள, அமேசான் இந்தியா நிறுவனம், சிங்கப்பூர் மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளது.

அதுபோல, கடந்த மாதம், உச்ச நீதிமன்றமும் அமேசானுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, பியூச்சல் ரீடெய்ல், சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:அமேசான்–பியூச்சர் ரீடெய்ல் வழக்கு தொடர்பான சீராய்வு மனு மீது, அடுத்த நான்கு வாரங்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்படும்.அதுவரை, இந்த வழக்கு தொடர்பாக டில்லி உயர் நீதிமன்றம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், சந்தை போட்டி ஆணையம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவை எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)