பதிவு செய்த நாள்
09 செப்2021
21:32
புதுடில்லி:‘பியூச்சர் ரீடெய்ல் – அமேசான் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, டில்லி உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் எந்த முடிவும் எடுக்கக் கூடாது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பியூச்சர் ரீடெய்ல் நிறுவனம், ‘பிக் பஜார்’ என்ற பெயரில் பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் சில்லரை வர்த்தகத்தை, 24ஆயிரத்து 731 கோடி ரூபாய்க்கு வாங்க, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதை எதிர்த்து, பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில், பங்கு முதலீடு செய்துள்ள, அமேசான் இந்தியா நிறுவனம், சிங்கப்பூர் மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளது.
அதுபோல, கடந்த மாதம், உச்ச நீதிமன்றமும் அமேசானுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, பியூச்சல் ரீடெய்ல், சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:அமேசான்–பியூச்சர் ரீடெய்ல் வழக்கு தொடர்பான சீராய்வு மனு மீது, அடுத்த நான்கு வாரங்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்படும்.அதுவரை, இந்த வழக்கு தொடர்பாக டில்லி உயர் நீதிமன்றம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், சந்தை போட்டி ஆணையம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவை எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|