பதிவு செய்த நாள்
09 செப்2021
21:33
புதுடில்லி:இந்தியாவில் கார் தயாரிப்பு தொழிற்சாலைகளை மூடுவதற்கு போர்டு நிறுவனம் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, போர்டு நிறுவனம், 15ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் கார் தயாரிப்பை துவக்கியது.சென்னை மற்றும் குஜராத்தின் சனந்த் நகரில் தொழிற்சாலைகளை நிறுவி, ‘பிகோ, எகோஸ்போர்ட்,ஆஸ்பயர்’ உள்ளிட்ட வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், கடுமையான போட்டி காரணமாக போர்டு இழப்பை சந்தித்தது.
இதையடுத்து, போர்டு நிறுவனத்தின் பெரும்பான்மை பங்கை வாங்க மஹிந்திரா நிறுவனம் முன்வந்தது. இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளதாக, இரு ஆண்டுகளுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டன. ஆனால், இந்தாண்டு துவக்கத்தில், இத்திட்டத்தில் இருந்து விலகுவதாக, மஹிந்திரா அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, போர்டு நிறுவனம், அதன் இரு தயாரிப்பு தொழிற்சாலைகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதேசமயம் ‘மஸ்டாங்’ உள்ளிட்ட கார்களை இறக்குமதி செய்து விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|