பதிவு செய்த நாள்
10 செப்2021
21:20

புதுடில்லி:புதிய எரிபொருள்களின் ஆய்வு, கண்டுபிடிப்பு, தயாரிப்பு ஆகிய வற்றில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடிவு செய்து உள்ளன.
டில்லியில், அமெரிக்க – இந்திய துாய்மை எரிசக்தி கூட்டுறவு திட்டத்தின் கூட்டம் நடைபெற்றது.‘வீடியோ கான்பரன்ஸ்’இதில், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் ஜெனிபர் கிரான்ஹோம் ஆகியோர், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றனர்.
இது குறித்து மத்திய பெட்ரோலிய துறை வெளியிட்டுள்ள அறிக்கை:அமெரிக்க–இந்திய துாய்மை எரிசக்தி கூட்டுறவு திட்டத்தின் கீழ், மின்சாரம் மற்றும்எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஸ்திரமான வளர்ச்சிக்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்து, இத்திட்டத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத துாய்மையான எரிபொருள்களை கண்டுபிடிப்பதிலும் இந்தியா – அமெரிக்கா இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஐந்து அம்சங்கள்இதன் வாயிலாக, காற்று மாசற்ற, துாய்மையான புதிய எரிபொருள்களின் கண்டுபிடிப்பு, ஆய்வு, தயாரிப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் பயன்பெறும்.
இந்த ஐந்து அம்சங்கள் அடிப்படையில், உயிரிஎரிபொருள்கள் துறை பணிகளை கண்காணிக்க, கூட்டு செயல் திட்டக் குழு அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.அத்துடன், இந்திய –அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தியா, 2030ல் 450 கிகாவாட் புதுப்பிக்க எரிசக்தி உற்பத்திக்கான இலக்கை நிர்ணயித்து, தீவிரமாக பணியாற்றி வருவதற்கு, ஜெனிபர் கிரான்ஹோம் பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|