பதிவு செய்த நாள்
11 செப்2021
19:20
புதுடில்லி:நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீடு, கடந்த ஜூலையில் 11.5 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூலையில், தொழில்துறை உற்பத்தி குறியீடு 11.5 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு தயாரிப்பு, சுரங்கம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி அதிகரிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும், சுரங்கம் மற்றும் மின்சார துறை உற்பத்தி வளர்ச்சி, கொரோனாவுக்கு முந்தையை நிலையைவிட சற்று குறைவாகவே இருக்கிறது.
மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாத நிலவரம் மிகக் குறைவாக இருந்ததால், ஒப்பீட்டில், நடப்பு ஆண்டில் அதிக வளர்ச்சி பெற்றதாக இருக்கிறது.தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் 77.63 சதவீத பங்களிப்பு கொண்டிருக்கும் தயாரிப்பு துறை, மதிப்பீட்டு காலத்தில், 10.5 சதவீத வளர்ச்சி பெற்றிருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலையில், தொழில்துறை உற்பத்தி குறியீடு 11.9 புள்ளிகளாக இருந்தது. நடப்பாண்டு ஜூலையில் இது 131.4 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இதுவே, கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு ஜூலையில், 131.8 புள்ளிகளாக இருந்தது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|